புதுச்சேரி

கோப்பு படம்.

வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்

Published On 2023-03-04 10:18 IST   |   Update On 2023-03-04 10:18:00 IST
  • உழவர்கரை நகராட்சியானது வீட்டுவரி, சொத்துவரி செலுத்துவோரின் நலன்கருதி ரெயின்போ நகர் 9-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ளது.
  • வீட்டுவரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.

புதுச்சேரி:

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சியானது வீட்டுவரி, சொத்துவரி செலுத்துவோரின் நலன்கருதி ரெயின்போ நகர் 9-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள சத்யா சிறப்பு பள்ளியில் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாமை  9 மணி முதல்  5 மணி வரை இடை விடாமல் நடத்த உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயின் போநகர், கிருஷ்ணாநகர், எழில் நகர், வசந்தநகர், செந்தாமரைநகர், சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து, வீட்டுவரி நிலுவை தாரர்கள் வரியை செலுத்தலாம்.

மேலும் ஜவகர் நகரில் உள்ள நகராட்சி தலைமை அலுவலகம், வி.வி.பி.நகர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி ஆகிய இடங்களில் உள்ள வீட்டுவரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News