திருபுவனையில் 4 வழி சாலைக்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசலில் ஈடுபட்டு வரும் காட்சி.
4 வழி சாலை பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
- சென்னை - நாகப்பட்டினம் சாலை, விழுப்புரம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
- பாலத்தின் வழியாக மதகடிப்பட்டுபாளையம் மற்றும் புதுவைக்கு செல்லும் வாகனங்கள், திருவோனை ஊருக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் இருக்கும் வியாபார கடைகளால் திரும்ப முடியாமல் குறுகிய சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
புதுச்சேரி:
சென்னை - நாகப்பட்டினம் சாலை, விழுப்புரம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக திருபுவனையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையில் தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது சாலையின் ஓரம் உள்ள பனை மரங்களை அகற்றாமல் மேம்பால பணிகள் நடைபெறுவதால், திருபுவனையில் ஒரு வழி பாதையாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுவையில் இருந்து திருபுவனை வழியாக மதகடிப்பட்டுபாளையம் செல்லும் சாலை கடலூர் வரை செல்கின்றது. இந்த சாலை தற்போது வாகனங்கள் திரும்ப முடியாமல், போதிய இடவசதி இல்லாமல் நான்கு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல், தினந்தோறும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அணிவகுத்து நிற்கின்றன பாலத்தின் வழியாக மதகடிப்பட்டுபாளையம் மற்றும் புதுவைக்கு செல்லும் வாகனங்கள், திருவோனை ஊருக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் இருக்கும் வியாபார கடைகளால் திரும்ப முடியாமல் குறுகிய சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சாலை விரிவாக்க அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றாமல் அவசரக் கதியில் சாலை போடும் பணியை செய்து வருகின்றனர்.
இதனால் திருபுவனைக்கு செல்ல சர்வீஸ் ரோடு இல்லாத நிலையில் கடலூர் சாலை குறுகிய சாலையாகவும் மாறி உள்ளது.
மேலும் சாலையின் இரு புறமும் இரண்டு சக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் இன்னும் குறுகிய சாலையாக இந்த சாலை மாறி உள்ளது. இதுவரை போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்நிலையில் சாலை உள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள வியாபாரக் கடைகளை அகற்றி வாகனங்கள் முறையாக திரும்பி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் திரும்பும் போது அங்குள்ள கட்டிடங்கள் மீது மோதி செல்கின்றன. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. சாலை போடும் பணி முடிந்தவுடன் திருபுவனைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாத பகுதியாக மாறும் நிலையில் திருபுவனை இருக்கப் போகின்றது.
இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.