புதுச்சேரி

கிளிஞ்சல், சங்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து அரசு பள்ளி மாணவிகள் கலை வடிவமாக மாற்றிய காட்சி.

null

கடலோர பயனற்ற பொருட்களை கலை பொருட்களாக வடிவமைத்த- அரசு பள்ளி மாணவிகள்

Published On 2023-04-06 14:52 IST   |   Update On 2023-04-06 14:53:00 IST
  • புதுவை சேலியமேடு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி கழிவு பொருட்களை கலை பொருட்களாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
  • கிளிஞ்சல் , சங்கை எடுத்து கலைப்பொருட்களை வடிவமைக்க கற்று தந்தார்.

புதுச்சேரி:

புதுவை சேலியமேடு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி கழிவு பொருட்களை கலை பொருட்களாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

புதுவை வீராம்ப ட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடலோரம் கிடைக்கும் கிளிஞ்சல் , சங்கை எடுத்து கலைப்பொருட்களை வடிவமைக்க கற்று தந்தார்.

மயில், விநாயகர், பரிசு பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளை மாண விகளுக்கு செய்து காண்பித்து பயிற்சி அளித்தார். இதனை மாணவிகள் கற்றுக் கொண்டு பயனற்ற பொருட்களான கிளிஞ்சல், சங்கு உள்ளிட்ட பொருட்களை கலை வடிவமாக உருவாக்கினர்.

Tags:    

Similar News