புதுச்சேரி
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
- நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியில் 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய அரசு பள்ளி ஆசிரியருமான மோகன் ராஜிக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை மரக்கன்று வழங்கினார். பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர்.