காங்கிரசார் இந்திகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
இந்திராகாந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
- மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
- புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆர்.இ.சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.