புதுச்சேரி

கோப்பு படம்

அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Published On 2022-08-25 09:36 GMT   |   Update On 2022-08-25 09:36 GMT
  • அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
  • இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.

புதுச்சேரி:

சுல்தான்பேட்டையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்விநேரத்தின்போது எதிர்கட்சித்தலைவர் சிவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்து பேசியதாவது:-

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதிகளவில் மாணவிகள் சேர விண்ணப் பித்துள்ளனர். இதனால் சுல்தான்பேட்டையில் அரசு மகளிர் என்ஜினீய ரிங்கல்லூரி அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News