புதுச்சேரி

கோப்பு படம்.

ஜிப்மர் மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை ஆய்வு

Published On 2022-09-22 09:14 GMT   |   Update On 2022-09-22 09:14 GMT
  • புதுவை ஜிப்மர் மருத்துவ மனையின் செயல்பாடுகள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
  • தோடு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளி களையே மருந்துகளை வாங்கி வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருத்துவ மனையின் செயல்பாடுகள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் நோயாளிகளுகான வசதிகள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளி களையே மருந்துகளை வாங்கி வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதை அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் விமர்சித்து நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார் செய்யப்பட்டது.

அவரும் புதுவைக்கு வந்து ஜிப்மரை ஆய்வு செய்தார். இத்தகைய சூழலில் ஜிப்மர் மருத்துவமனையில், இருப்பு உள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என டாக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் செல்கிறார்.

Tags:    

Similar News