கோப்பு படம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- பெரிய மார்க்கெட் விரிவாக்கம் நவீன படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.100 கோடி அளவில் திட்டம் வரையறுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. முதல்- அமைச்சர் ரங்கசாமி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி உருப்படியான திட்டங்களுக்கு முன் உரிமை வழங்கப்பட்டது.
பஸ் நிலைய விரிவாக்கம், நவீன படுத்துதல், பெரிய மார்க்கெட் விரிவாக்கம் நவீன படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.100 கோடி அளவில் திட்டம் வரையறுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை செயல்படுத்த விடாமல் சில சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் போர்வையில் முட்டுகட்டை போட்டு தடுத்து வருகின்றனர்.
முதல்- அமைச்சர் ரங்கசாமி இவற்றை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அரசு உறுதி யுடன் செயல்படுத்த உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.