புதுச்சேரி
புதுவைத் தமிழ்ச் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த காட்சி.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
- திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 -ந் தேதி நடைபெற்று வருகிறது.
- தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 -ந் தேதி நடைபெற்று வருகிறது.
இம்மாத நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் சீனு.மோகன்தாசு, துணைத்தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணைச் செயலாளர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் உசேன், சிவேந்திரன், வாழ்நாள் உறுப்பினர் பொற்செழியன், சண்முகம்,ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.