புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2023-09-18 11:48 IST   |   Update On 2023-09-18 11:48:00 IST
  • பலத்த போலீஸ் பாதுகாப்பு
  • புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை இன்று மாலை 6 மணிக்கு பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்ப டுகிறது.

காலாப்பட்டில் 19 அடி உயரத்திலும், பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி உயரத்திலும், கோரிமேடு, காட்டே ரிக்குப்பம் பகுதிகளில் 12 அடி உயரத்திலும், வில்லியனூரில் 10 அடி உயரத்திலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படுகிறது.

இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவையின் அனுமதியோடு புதுவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதுதவிர லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, ரெட்டிபார்பாளையம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உட்பட புதுவை நகர், புறநகர் பகுதிகளில் 5 அடி முதல் 21 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

பல்வேறு ஆட்டோ, கனரக வாகன தொழிலாளர் சங்கங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுவையின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 20-ந் தேதி காலாப்பட்டு மற்றும் நல்லவாடு கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 2-ம் கட்டமாக நகர்ப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் 22-ந் தேதி கடற்கரை சாலையில் 3 கிரேன் மூலம் விஜர்சனம் செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர், புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News