புதுச்சேரி
கோப்பு படம்.
மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும்
- பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
- கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து50 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.
மீதம் உள்ள 90 ஆயிரம் லிட்டர் பால் அண்டை மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இந்த நிலையை மாற்றி நமது மாநிலத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
பால் உற்பத்தி யாளர்களுக்கு பாண்லே மூலம் வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலையில் தீவனம் மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.