புதுச்சேரி

ஏ.எப்.டி. ஆலையை படத்தில் காணலாம்.

ஏ.எப்.டி.யில் ஜவுளி பூங்காவுடன் ஆடை வடிவமைப்பு மையம்

Published On 2023-07-18 14:03 IST   |   Update On 2023-07-18 14:03:00 IST
  • மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் நேஷனல் பேஷன் டெக்னாலஜி தொழில்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • ஆலை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை ஏ.எப்.டி. ஆலையில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் நேஷனல் பேஷன் டெக்னாலஜி தொழில்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த குழுவினர் சமீபத்தில் புதுவைக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரை யாடினர். தொடர்ந்து ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் எஸ்.பி.வர்மா தலைமையிலான குழுவினர் புதுவையில் உள்ள அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, ஆலை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

திருப்பூரில் பேஷன் டெக்லானஜி நிறுவனம் அமைக்கப்பட்டது போல புதுவையில் ஆடை வடிவமைப்பு மையம் அமைக்கலாம் என அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மத்திய ஜவுளித்துறை உறுதியான முன்மொழிவு வந்தால் பூங்கா, வடிவமைப்பு மைய கட்டுமான பணியை தொடங்க தயாராக உள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News