புதுச்சேரி
புளு ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
புதுச்சேரி:
புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியின் திருவள்ளுவர் வளாகத்தில் பள்ளி அளவிலான மாஸ் எக்ஸ்போ - 2023 கண்காட்சி நடந்தது.
2 நாட்கள் நடந்த கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
இதில் நடுவர்களாக கணித ஆசிரியை டாக்டர் ஜெலதீஸ்வரி, அறிவியல் பேராசிரியர் ராஜகுரு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் சுகுமாறன் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் நன்றி கூறினார்.
2-ம் நாள் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவில் உழவர்கரை ெதாகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர் பங்கேற்று மாண வர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.