பயிற்சி முடித்த வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி தெரிவித்த காட்சி.
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
- தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது.
- முடிவில் கருணாலயம் கிராம இளைஞர் சங்க அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கருணாலயம் கிராமச் சங்கம், பெங்களூர் எனேபிள் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
இவ்விழாவில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அமிர்தவல்லி, புதுவை மாநில மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் இயக்குனர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எனேபிள் இந்தியா பெங்களூர் நிறுவனத்தின் புதுவை அலுவலர் ஆல் ரிங் டார்விஸ், விமல் ராஜ்குமார் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக அனை வரையும் கருணாலயம் கிராம நல சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் கருணாலயம் கிராம இளைஞர் சங்க அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.