புதுச்சேரி
கோப்பு படம்.

தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-10-04 06:42 GMT   |   Update On 2023-10-04 06:42 GMT
  • புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
  • தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் பல தனியார் நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

100-க்கும் மேற் பட்ட இடங்களை நிரப்ப என்ஜினியரிங், கலை, அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 10, 12-ம் வகுப்பு படித்த அனைத்து மாணவ ர்களும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் தங்கள் தற்குறிப்பு, கல்விதகுதி உண்மை, நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News