புதுச்சேரி

மிஷின் வீதியில் உள்ள தூய ஜென்ம ரக்கினி அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-04-09 12:47 IST   |   Update On 2023-04-09 12:47:00 IST
  • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது.
  • புதுவை ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி தேவாலயம் நடைபெற்றது.

புதுச்சேரி:

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-வது நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி தேவாலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம் மற்றும் காரைக்கால் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராத்தனை நடைபெற்றது.

தேவாலயங்களில் நடந்த திருப்பலி மற்றும் ஆராதனைகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News