புதுச்சேரி

திருபுவனை-மதகடிப்பட்டு சர்வீஸ் சாலையில் மூடிக்கிடக்கும் கடைகள்.

வாகன போக்குவரத்து குறைந்ததால் வியாபாரம் பாதிப்பு

Published On 2023-06-23 11:18 IST   |   Update On 2023-06-23 11:18:00 IST
  • வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
  • வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

புதுச்சேரி:

புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்பணிக்காக சாலை ஓரம் இருந்த ஆயிரக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் அரியூர், கண்டமங்கலம், திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் சர்வீஸ் சாலைகள் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் சாலைகளில் இருபுறமும் உள்ள கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் திருவாண்டார் கோவில், திருபுவனை மதகடிப்பட்டு பகுதியில் பாலங்கள் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்தில் மட்டுமே பஸ்கள் நின்று செல்வதால் அங்கு சென்று பொதுமக்கள் பயணித்து வருகிறார்கள்.

இதனால் இடையில் உள்ள ஓட்டல்கள், துணிக்கடைகள், மெடிக்கல், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திர கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மதுபான கடைகள் என பல்வேறு வியாபார கடைகள் பாதிக்கப்பட்டு, முற்றிலும் வியாபாரத்தை இழந்துள்ளனர்.

கடைகளுக்கு வாடகை கூட தர முடியாத நிலையில் வியாபாரிகள் தற்போது உள்ளனர். வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

அதோடு சாலை போடும் பணிகளால் தூசி, மண் உள்ளிட்ட குப்பைகள் கடைகளில் உள்ள பொருட்களில் படிவதால் தினந்தோறும் பொருட்களை சுத்தம் செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது என்று, வியாபாரிகள் புலம்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News