புதுச்சேரி
ஆட்டுப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், இரவில் தீமிதி திருவிழாவும் நடை பெற்றது. திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செ லுத்தினர். (வெள்ளிக்கிழமை ) காலை அபிஷே கமும், மதியம் 12 மணிக்கு சக்திகிரகம் வீதி உலா, கூழ் வார்த்தலும், இரவில் கும்ப படை யலும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை ) அம்மன் வீதியுலாவும், 21-ந்தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.