கோப்பு படம்.
- புதுவையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- புதிதாக புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
புதுவையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுவையில் 201 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 35 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மரில் சி கிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து காரைக்கால் கலெக்டர் குலோந்துங்கன், கொரோனாவை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
தியேட்டர், வணிக வளாகம், மருத்துவமனை போன்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவுக்கு பெண் பலியான சம்பவம், புதுவையில் தொற்று அதிகரிப்பால் மக்களிடையே மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.