புதுச்சேரி

சாலை, வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

ரூ.23¼ லட்சம் செலவில் சாலை, வாய்க்கால் அமைக்கும் பணி

Published On 2023-04-20 14:54 IST   |   Update On 2023-04-20 14:54:00 IST
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
  • சங்க தலைவர் முருகன் பிரபாகரன் தேவா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மணவெளி விக்டோரியா நகர், டோல்கேட் அரவிந்த நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 23¼ லட்சம் செலவில் சாலை, வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கான பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, பா.ஜனதா நிர்வாகிககள் லட்சுமி காந்தன், சக்திபாலன் அறங்காவல் குழு தலைவர் காமராஜ், நாகராஜ், ரஞ்சித், தனுசு, பன்னீர், குமரன், ரமேஷ், ரேவதி, தினகரன், மூர்த்தி, வீராசாமி, அருள்ராஜ், தங்கதுரை, செந்தில், அபிஷேகம், இளஞ்செழியன், சக்திவேல், வேலாயுதம், முகிலால் வருமா, சிவப்பிரகாசம், சபரி, ஹயாத்பாஷா, வேணுகோபால், கதிரேசன், கோபிகிருஷ்ணா, தமிழ்வாணன், வசந்தி ராஜா, முரளி, அரவிந்தர் நகர் குடியிருப்பு சங்க தலைவர் முருகன் பிரபாகரன் தேவா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News