புதுச்சேரி

மேல்சாத்த மங்கலத்தில் படுகை அணை அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். 

ரூ.1¾ கோடியில் குடுவை ஆற்றில் படுகை அணை அமைக்கும் பணி

Published On 2023-06-08 08:02 GMT   |   Update On 2023-06-08 08:02 GMT
  • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  • ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவை வேளாண்துறை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு நிதி உதவியின் மூலம் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

படுகை அணை கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நிலத்தடி நீர் அதிகார அமைப்பு உறுப்பினர் செயலர் மனோகர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல உறுவையாறு அன்பு நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இங்கு 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி யுடன் கூடிய குடிநீர் திட்டம் ரூ. 1 கோடியே 51 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்கான அடிக்கல்லை முதல்- அமைச்சர் ரங்கசாமி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News