புதுச்சேரி
- வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- சேவாதளம் ரங்கநாதன், கிராம தலைவர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் பெரும்திரளாய் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய மோடி அரசை கண்டித்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் காங்கேயன், வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சூசைராஜ், மாநில மீனவர் அணி தலைவர் பாஸ்கரன், பி.சி.சி. அன்புமணி, சிறப்பு அழைப்பாளர்கள் குகன், வக்கீல் விநாயகமூர்த்தி, சாமிநாதன், இளைஞர் காங்கிரஸ் சசிகுமார், மகிளா காங்கிரஸ் பொன்னி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ ரத்தினம், குருமூர்த்தி, கோவிந்தன், சேவாதளம் ரங்கநாதன், கிராம தலைவர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் பெரும்திரளாய் கலந்து கொண்டனர்.