புதுச்சேரி

அரசு பணி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி சான்றிதழை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.

அரசு பணி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

Published On 2023-05-14 08:35 GMT   |   Update On 2023-05-14 08:35 GMT
  • வைத்திலிங்கம் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்
  • புதுவைப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரி:

மாரியப்பனார்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்தில் மேனிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவல் ஆய்வாளர், காவலர், பண்டகக் காப்பா ளர் போன்ற புதுவை அரசுப் பணிகளுக்கான இலவச பயிற்சி நிறைவு விழா,பயிற்சி கையேடு வெளியீட்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.

அறக்கட்டளை நிறுவுநர் மா.மா. மாரியப்பனார் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். நண்பர்கள் தோட்டம் தலைவர் ப.திருநாவுக்கரசு நெறியாள்கை செய்தார். விழாவில், வைத்தி லிங்கம் எம்.பி. கலந்துகொண்டு பயிற்சிக் கையேட்டை வெளியிட, வைத்திய நாதன் எம். எல்.ஏ. பெற்றுக்கொண்டார். வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: மாணவர்கள் தோல்வியைக் கண்டு கவலைப்படக்கூடாது தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டுவிட்டுக் கல்வியிலும், உழைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார் பயிற்சியின்போது நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் இடம் பிடித்த பிரகாஷ் ராஜ், சிவசக்தி மற்றும் தமிழமுது ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை அவர் வழங்கிப் பாராட்டினார்.

மு. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில்: தான் உழைப்பால் உயர்ந்ததையும், மாணவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கல்வியில் முன்னேற வேண்டும் என்றார். தட்டச்சு மாணவர்களுக்குச சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் தொழிலதிபர் குமரகுரு பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் தமிழ்மாமணி அ.டீசேன். நிழற்படக் கலைஞர் காரை இரா.நேரு, ஜீவானந்தபுரம் கிராமக்குழு ர.சபாநாயகம், தலைமை ஆசிரியர் சிகாசிநாதன், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரசுத் தேர்வுக்காக நடத்தப்பட்ட இந்த இலவசப் பயிற்சிக்காக இடத்தை இலவசமாக அளித்த ராசகுருவின் மகன், மதியழ்கள் பாராட்டப்பட்டார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள், உதவவுகம், செந்தில்குமார், அரிமாபிரபாகரன், பாராட்டபட்டனர், அருணகிரி, இளவரசி சங்கர் ஆகியோரும்

விழாவின் இறுதியில், தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.

விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News