புதுச்சேரி
ரூ.26 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா
- கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.
- இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கயர்கரசன், நகர மன்ற துணை தலைவர் ஜீனத்பீவி முபாரக், 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், ஜெயஸ்ரீ சுகுமார், வார்டு தி.மு.க. செயலாளர்கள் வரதன், வெங்கடேசன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.