புதுச்சேரி

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடிய போது எடுத்த படம்.

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

Published On 2023-11-17 08:39 GMT   |   Update On 2023-11-17 08:39 GMT
  • புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.
  • ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவர்கலால் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி ஆசிரியர்களின் நடனம், நாடகம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோ லியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News