புதுச்சேரி

கோப்பு படம்.

எம்.எல்.ஏ.க்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

Published On 2023-11-11 04:15 GMT   |   Update On 2023-11-11 04:15 GMT
  • தீபாவளி பண்டிகைக்காக தலா 500 கிேலா ஸ்வீட், பட்டாசு பாக்ஸ் வழங்கினார்
  • 18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகை நாளை (12-ந் தேதி) கொண் டாடப்படுகிறது.

இதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தீபாவளி பரிசாக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்க ரைக்கான பணம் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாத அரிசிக்கான பணம் சிவப்பு குடும்ப அட் டைதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.600 வீதம் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது.

18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதேபோல், கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 என தீபாவளி பாண்டி கையையொட்டி பயனா ளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது. இது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதுவையில் உள்ள 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உட் பட 33 எம்.எல்.ஏ.க்களும் தலா 500 பட்டாசு பாக்ஸ், 500 கிலோ ஸ்வீட் வீதம் முதல் வர் ரங்கசாமி தீபாவளி பரிசு வழங்கினார்.

இது எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க் களுக்கும் தீபாவளி பரிசு வழங்கியது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்ட போது, சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று ஒற்றை வார்த்தை யில் பதில் அளித்துவிட்டு சென்றார்.

Tags:    

Similar News