புதுச்சேரி

தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.

செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-08-18 15:14 IST   |   Update On 2023-08-18 15:14:00 IST
  • கவர்னர், முதல் -அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
  • ஆடி மாதம் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

புதுச்சேரி:

புதுைவ அரியாங் குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடி மாதம் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

அதனை முன்னிட்டு தினசரி காலையில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு இரவு பல்வேறு வாகனங்க ளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய விழா வான தேரோட்டம் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு செங்கழுநீர் அம்மன் மற்றும் விநாயகர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் அமர்த்தினர்.

பின்னர் காலை 8.10 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், துணை சபா நாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரை வீராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக் கானோர் இழுத்தனர். தேர் மாடவீதி வழியாக வந்து மீண்டும் 10 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.

விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், கல்யாண சுந்தரம்

எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், காங்கிரஸ் பொதுச்செய லாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி, பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வக்குமார், தொகுதி பொறுப்பாளர் வசந்தராஜ், பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ், அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்வேந்தன், காங்கிரஸ் பிரதேச கமிட்டி உறுப்பினர் சசிகுமார், அரியாங்குப்பம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தமிழழகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினமே விழாக்கோலம் பூண்டி ருந்தது.

தேரோட்டத்தைகான புதுச்சேரி, தமிழக பகுதியில் இருந்து பல்லாயிரக்க ணக்கான மக்கள் வந்து இருந்தனர். விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.

மேலும் அங்கு நடந்த சமபந்தி விருந்தினை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். தோரோட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேரோட்ட விழாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

வருகிற 25-ந் தேதி முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், தனி அதிகாரி சுரேஷ் மற்றும் விழா குழுவினர், மீனவ கிராமமக்கள் செய்தனர்.

Tags:    

Similar News