அனிபால் கென்னடி
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.
- சாகர்மாலா திட்டத்தில் புதுவை துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது.
- ஒரு நாளைக்கு 4 கி.மீ. தூரம் 7 லட்சம் கன அடி மண் அள்ள வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க.
எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி பேசியதாவது:-
சாகர்மாலா திட்டத்தில் புதுவை துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச் சரோ, அதிகாரிகளோ ஆய்வு செய்வதில்லை. இதை பயன்படுத்தி ஒப்பந்தப்படி மணல் அள்ளுவது கிடையாது. 2 டிரெட்ஜிங் எந்திரம் மூலம் தூர்வார வேண்டும். ஆனால் ஒரு எந்திரம் மட்டுமே மணல் அள்ளுகிறது.
மணல் அள்ளுவதை கணக்கிடும் கருவியும் கிடையாது. அதோடு ஒரு நாளைக்கு 4 கி.மீ. தூரம் 7 லட்சம் கன அடி மண் அள்ள வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.
கடலில் அள்ளப்பட்டு, கொட்டப்படும் மணல் கொள்ளை யடிக்கப்படுகிறது. எனவே தூர்வாரும் பணி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்க ப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.