புதுச்சேரி

கோப்பு படம்.

இடத் தகராறில் கார்- பைக் உடைப்பு

Published On 2023-11-09 08:59 GMT   |   Update On 2023-11-09 08:59 GMT
  • புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார்.
  • விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

புதுச்சேரி:

புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ஹேமாதேவி. இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே ஆனந்தன் என்பவர் வீடு கட்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆனந்தனுக்கும் ஹேமாதேவிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆனந்தன் இரும்பு கம்பியால் ஹேமாதேவி வீட்டின் அருகே நின்ற கார் மற்றும் விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

இதுகுறித்து ஹேமாதேவி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News