புதுச்சேரி

ஜான்குமார்

ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்- ஜான்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-08-29 14:53 IST   |   Update On 2022-08-29 14:53:00 IST
  • புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-

புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு விரோதமான திட்டம். இத்திட்டத்துக்கு பதிலாக 10 ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்.

சங்கராபரணி, தென்பெண்ணையாறு மூலம் தண்ணீர் வருகிறது. அதை 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும். மழைநீரை இயற்கையான முறையில் சேகரிக்கலாம். 84 ஏரியில் 10 ஏரியைத்தான் குடிநீருக்கு பயன்படுத்த சொல்கிறோம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி பயிற்சி பெறச்செய்ய வேண்டும். புதுவையில் உள்ள 609 குளங்களில் 25 சதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீட்க வேண்டும். இவ்வாறு செய்தால் புதுவையின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News