புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்

Published On 2023-03-05 05:07 GMT   |   Update On 2023-03-05 05:07 GMT
  • தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே தொழிலாளியை தாக்கியதை தட்டிக்கேட்ட தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூர் அருகே மேல் சாத்தமங்கலம் ஏம்பலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாரதி தாசன்(வயது37). இவர் தனது வீட்டின் அருகே பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில்  இந்த நிறுவனத்தில் இருந்து அம்ரித்குமார் என்பவர் வேலை செய்து விட்டு தான் தங்கியுள்ள இடத்துக்கு செல்ல முயன்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், கருணா, சேது மற்றும் 4 பேர் அம்ரித்குமாரை வழிமறித்து அவரை சரமாரியாக கையாளும், உருட்டு கட்டையாளும் தாக்கினர்.

மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனை கண்ட பாரதிதாசன் அவர்களிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அந்த கும்பல் பாரதிதாசனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

இதுகுறித்து பாரதிதாசன் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News