புதுச்சேரி

பாசிக் தொழிலாளர்கள் தலைகீழாக நின்று போராட்டம் நடத்திய காட்சி.

பாசிக் தொழிலாளர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

Published On 2023-03-25 09:00 GMT   |   Update On 2023-03-25 09:00 GMT
  • புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாசிக்கில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
  • பாசிக் தலைமை அலுவலகம் எதிரே 12-வது நாள் போராட்டம் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாசிக்கில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 113 மாதம் சம்பளம் வழங்கவில்லை.

இதை கண்டித்து சம்பளம் வழங்க வலியுறுத்தியும், பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தக்கோரியும் ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பாசிக் தலைமை அலுவலகம் எதிரே 12-வது நாள் போராட்டம்  நடந்தது. இதில் ஊழியர்கள் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், கவுரவத் தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மகேந்திரன், மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News