புதுச்சேரி

 புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்டம் 3 அரியாங்குப்பம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் 5 பேருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

Published On 2023-09-21 09:31 GMT   |   Update On 2023-09-21 09:31 GMT
  • ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
  • குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலதிட்டம் சார்பில் சமத்துவ வளையல் அணி விழா குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் கோலாகலமாக கொண்டா டப்பட்டது. நிகழ் ச்சிக்கு இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர் அமுதா, திட்ட அதிகாரி கருணாநிதி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து அச்சதை தூவி ஆசி வழங்கினர்.

பின்னர் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து விளக்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News