விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
- விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சேர்மன் சந்திரசேகர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சுமார் 100 பேருக்கு போர்வை மற்றும் தலையணை உரையை துணை பதிவாளர் பெருமாள் வழங்கினார்.
புதுச்சேரி:
விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டே ஷன் நிகர்நிலை பல்கலைக்கழக துணை தலைவர் மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சேர்மன் சந்திரசேகர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் துணை பதிவாளர் பெருமாள் தலைமையில் பாகூரில் பழமை வாய்ந்த மூலநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் வன்னி மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சுமார் 100 பேருக்கு போர்வை மற்றும் தலையணை உரையை துணை பதிவாளர் பெருமாள் வழங்கினார். தொடர்ந்து ஆதரவற்ற குழந்தை களுடன் கேக் வெட்டி, பிரியாணி விருந்து வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் அரியாங்குப்பம், காக்காயன்தோப்பு பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.