சாரதா கங்காதரன் கல்லூரி வேலைவாய்ப்பு பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு வழங்கிய காட்சி.
- சாரதா கங்காதரன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- கோடாக் லைவ் இன்சூரன்ஸ் தலைமை மேலாளர் சஞ்சய் ரவீந்திரன், மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
புதுச்சேரி:
சாரதா கங்காதரன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கோடாக் லைப் இன்சூரன்ஸ் பிரதிநிதிகள் பங்கே ற்று, மாணவர்களுக்கு அறிமுக உரையாற்றினர்.
முகாமில் சாரதா கங்காதரன் கல்லூரி மாணவர்கள், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பணி நியமன தேர்வின் முதல் சுற்றில் ஆன்லைன் மூலம் திறன் சோதனை, தர்க்க ரீதியான சிந்தனை, தொழில் நுட்ப திறன் ஆகியவையும், 2-வது சுற்றாக நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது.
இதில் 8 மாணவர்கள் தேர்வாகினர். கோடாக் லைவ் இன்சூரன்ஸ் தலைமை மேலாளர் சஞ்சய் ரவீந்திரன், மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
முன்னதாக வேலை வாய்ப்பு தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் துறை தலைவர் அருண்மொழி சிறப்புரை ஆற்றினார்.
புதுவை ஆட்டோ இன்னோவேசன் தலைமை நிர்வாக அலுவலர் கரன்பரேக், 'புரோக் ரே ஸ் இன்பினிட்டி' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார். கல்லூரி முதல்வர் உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார். வேலை வாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் கமலகண்ணன் நன்றி கூறினார்.