அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழிக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- ராம சந்திரன்,தனவேலு, செல்லா என்ற தமிழ் செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழிக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
புதுவையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.ம.மு.க. சார்பில் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் தெற்கு மாநில அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், இணைச்செயலாளர் லாவண்யா மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் ரகுபதி,ராஜா எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சீத்தாராமன்,
ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்கள் சுதாகர், கபிரியேல் தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல், ராம சந்திரன்,தனவேலு, செல்லா என்ற தமிழ் செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.