புதுச்சேரி

கோப்பு படம்.

குறைந்த கட்டணத்தில் மின் கொள்முதல் செய்ய அனுமதி

Published On 2023-10-05 12:11 IST   |   Update On 2023-10-05 12:11:00 IST
  • மத்திய மந்திரிக்கு நமச்சிவாயம் கடிதம்
  • குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையின் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வால் நுகர்வோருக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய மந்திரி ஆர்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு மின் கொள்முதலுக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும்போது விலை அதிகரிப்பால் நுகர்வேர் மின் கட்டணம் உயர்கிறது. மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மத்திய தொகுப்பில் இருந்து புதுவைக்கு ஒதுக்கீடு செய்யும் மின் கொள்முதலை குறைக்க, குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மின் கொள்முதல் விலையை குறைக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

Tags:    

Similar News