புதுச்சேரி

தொடர்நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கிய காட்சி.

தொடர்நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகை

Published On 2023-10-08 04:58 GMT   |   Update On 2023-10-08 04:58 GMT
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்
  • தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் தொடர் நோய் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் மாநில தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி கலந்து கொண்டு தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான அரசாணை யினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், ராகேஷ், ரகுராமன், மணி, ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News