புதுச்சேரி

கோப்பு படம்.

வேளாண் அறிவியல் மைய ஊழியர்கள் கவர்னரிடம் மனு

Published On 2023-09-28 14:17 IST   |   Update On 2023-09-28 14:17:00 IST
  • 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.
  • பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

புதுச்சேரி:

வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், வேளாண் அறிவியல் மையத்தில் 2009 முதல் 11 ஆண்டு தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வந்தோம். 2020 மார்ச் 7-ந் தேதி முன்னறிவிப்பின்றி 156 பேரை பணிநீக்கம் செய்தனர். 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.

எனவே அரசு கொள்கை முடிவு எடுத்த நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது பா.ஜனதா விவசாய அணி தலைவர் புகழேந்தி, முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் ஹரிதாஸ், ஊழியர்கள் புத்துப்பட்டான், புவியரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News