கோப்பு படம்.
அதி வேகமாக வாகனங்களில் சென்றால் நடவடிக்கை
- புதுவை மாநிலம் சுமார் 482 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும்.
- புதுவையில் 10 ஆண்டை காட்டிலும் வாகனங்கள் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலம் சுமார் 482 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும். புதுவையில் 10 ஆண்டை காட்டிலும் வாகனங்கள் அதிகரித்துள்ளது. 2 சக்கர வாகனங்களில் செல்வோர் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் தாறுமாறாக செல்வதால் ஓட்டுபவரும், எதிரே வருபவரும் அடிபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
சிறார்கள் வாகனங்கள் ஓட்டினர் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை என உத்தரவு உள்ளது. தமிழக தலைநகரான சென்னையில் 40 கி.மீக்கு மேல் வேகமாக வாகனம் செலுத்தும் நபர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசும் போலீசும் நகர பகுதியில் 40 கி.மீக்கு மேல் வேகமாக வாகனம் செலுத்துவோர் மீது அபராதத்துடன் வழக்கும் பதிவு செய்ய வேண்டும். சிறார்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்கள் செலுத்து வதை கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.