புதுச்சேரி

கோப்பு படம்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2023-03-16 05:16 GMT   |   Update On 2023-03-16 05:16 GMT
  • குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள்.
  • கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி:

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள். அமைச்சர் இந்த துறையில் தனி கவனம் செலுத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலாப்பட்டில் அமை ந்துள்ள சிறைச்சாலையில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் ரூ.24 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள்தரம் உயர்த்த ப்படும் என அறிவித்தது பாராட்டுக்குரியது.

கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே அனைத்து பள்ளிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு விடுவதை கைவிட்டு, மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 1 முதல் 6 வரை கொண்டு வருவதற்கு நன்றி. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7- வது ஊதியக்குழு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். மாணவர் இளைஞர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களை வழிநடத்தி செல்ல உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேவை.

ஐ.டி. பார்க் காலாப்பட்டில் ஆரம்பிப்பதாக கூறினர். பல்கலைக்கழகத்தில் பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதனை ஐ.டி. பார்க் அமைக்க பயன்படுத்தி க்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News