- ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
- மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்த போது அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசு போராடிய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி மின்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது, அரசின் கட்டுப்பாட்டி லேயே இயங்கும். அனைவரின் கருத்தை அறிந்துதான் புதுவை அரசு செயல்படும் என உறுதியளித்தது. இப்போது மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அளித்த உறுதி மொழிக்கு எதிராக செயல்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தொழிற் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மின்துறையை புதுவை மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் உள்ளதாக மின்துறை செயலாளர் கூறியுள்ளார். புதுவை அரசு மின் துறையை போலியாக மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் டெண்டர் கோரப் பட்டுள்ளதாக சொல்வது அப்பட்டமான, பொய்யான மோசடி. மின்துறை குறித்து பாராளுமன்றம், சட்ட மன்றத்தில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும், உயரதிகாரிகள் வேறு விதமான கருத்துக்களையும், பொய்யான விவரங்க ளையும் அளித்து வருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு களில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. புதுவை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு துணை போகக்கூடாது. மின்துறையின் இன்றைய நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.