புதுச்சேரி
புதுவையில் நலவாரியம் அமைக்க வேண்டும்
- புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
- புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.
புதுச்சேரி:
சர்வதேச திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.
புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பின்னர் திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஷீத்தல் நாயக் கூறும்போது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் உள்ளது. வடமாநிலங்களிலும் இதேபோல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.
புதுவை திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு, மாத உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.