புதுச்சேரி

கோப்பு படம்.

சிறப்புக்கூறு நிதியை செலவிட தனிதுறை அமைக்க வேண்டும்

Published On 2023-10-25 15:15 IST   |   Update On 2023-10-25 15:15:00 IST
  • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
  • சிறப்புக்கூறு நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் பதவிநீக்கம் தொடர்பாக 2 வாரம் நிலவிய பதட்டமான சூழல் முடிவுக்கு வந்துள்ளது. இதன்பின் வேறு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் நியமிக்க வேண்டும்.

 புதிய அமைச்சர் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்றே அழைக்கப்பட வேண்டும். புதுவையில் 16 சதவீதம் உள்ள ஆதிதிராவிட மக்களின் நலனை மேம்படுத்த வேண்டும். சிறப்புக்கூறு நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.

சிறப்புக்கூறு திட்டத்துறை என தனி துறையை உருவாக்கி திட்டங்களை தயாரித்து நிதி ஒதுக்க வேண்டும். எனவே புதிதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை நியமித்து, சிறப்புக்கூறு திட்டத்துறையை அமைத்து திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News