புதுச்சேரி

கோப்பு படம்.

கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-09-24 10:14 IST   |   Update On 2023-09-24 10:14:00 IST
  • அண்ணாநகரில் உள்ள ஒரு சுவிட் கடையில் சுவிட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

பாகூர் அருகே தமிழக பகுதியான செல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வயது 29) இவர் தவளகுப்பம் அண்ணாநகரில் உள்ள ஒரு சுவிட் கடையில் சுவிட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வழக்கம் போல் சதீஷ் தனது மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி விட்டு சுவிட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சதீஷ் திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சதீஷ் தவள குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News