புதுச்சேரி

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் மதகடிப்பட்டு வார சந்தை.

சேரும், சகதியுமான மதகடிப்பட்டு வாரசந்தை

Published On 2023-10-31 08:39 GMT   |   Update On 2023-10-31 08:39 GMT
  • மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.
  • பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

புதுச்சேரி:

புதுச்சேரியின் புகழ்பெற்ற மாட்டு வார சந்தை மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.

இந்த சந்தையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாட்டு வியாபாரிகள் இந்த சந்தையில் ஒன்று கூடி மாடுகளை விற்பதும், வாங்குவதும் என பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

இந்த வாரச்சந்தையில் மாடுகள் மட்டும் இல்லாமல் காய்கறிகள், பழங்கள், கருவாடுகள், மரக்கன்றுகள், மாடுகளுக்கு தேவையான மூக்கணாம் கயிறு, சாட்டை ஆகியவற்றை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை செய்வார்கள். தற்போது இந்த சந்தை மேம்படுத்தப்படாமல் குடிநீர், கழிவறைகள், சிமெண்ட் தரைகள், சுற்றுச்சுவர் மற்றும் கதவுகள் என அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் வாரச்சந்தை எங்கு பார்த்தாலும் சேரும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த வாரம் வியாபார கடைகள் குறைந்து காணப்பட்டது.

Tags:    

Similar News