புதுச்சேரி

தவளக்குப்பம் பிரீமியர் லீக் போட்டி 90 வீரர்கள் ஏலம் விடப்பட்ட காட்சி.

90 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

Published On 2023-08-08 14:15 IST   |   Update On 2023-08-08 14:15:00 IST
  • பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி நடத்த வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தவளகுப்பத்தில் நடந்தது.
  • கிராமங்களை சேர்ந்த 90 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

புதுச்சேரி:

தவளக்குப்பத்தை சுற்றியுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐ.பி.எல். போல, தவளக்குப்பம் பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி நடத்த வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தவளகுப்பத்தில் நடந்தது. தவளக்குப்பத்தை மையப் பகுதியாக கொண்டு அதனை சுற்றியுள்ள கிராமங்களான பூரணாங்குப்பம், தானம்பாளையம், பிள்ளையார் திட்டு, பெரிய காட்டுப்பாளையம், ஆண்டியார்பாளையம், இடை யார்பாளையம், அரியாங்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 90 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

6 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு வீரர்களை திறமைகளை திரையில் வெளியிடப்பட்டு அதன் மூலம் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் அதிகப் பட்சம் தொகையில் தவளக்குப்பத்தைச் சேர்ந்த ரகுவரன் ரூ.2,600 தானம்பாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு ரூ. 2,400-யும் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராகுல்ராஜ் ரூ.2,400 அரியாங்குப்பத்தைச் சேர்ந்த அரவிந்த், தவளகுப்பத்தைச் சேர்ந்த கோபால் ஆகியோர் ரூ.2,200 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் வியாபாரிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள் முன்னாள் விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.

இப்போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தவளக்குப்பம் பிரீமியர் போட்டிகள் பொறுப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News