புதுச்சேரி

விதைப்பந்துகள் உள்ள காட்சி.

வனப்பகுதியில் 75 ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டன.

Published On 2022-09-18 11:00 IST   |   Update On 2022-09-18 11:00:00 IST
  • புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.
  • ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

புதுச்சேரி:

புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனை 'வெர்ச்சூ' புத்தகத்தில் இடம் பிடித்தது. இதன் ெதாடர்ச்சியாக புதுவை காலாப்பட்டு கீழ்புத்துப்பட்டு வனப்பகுதி, ஏரிக்கரை, தோப்புகள் தரிசு நிலங்களில்

என்.எஸ்.எஸ். குழுவினர் உருவாக்கிய விதைபந்துகள் தூவப்பட்டன. இதில் சி்றப்பு விருந்தினராக தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டசேன் நிறுவன இயக்குனர் பூபேஷ் குப்தா கலந்து கொண்டு மாணவர்களின் சுற்றுச்

சூழல் ஆர்வத்தை பாராட்டினார். ேமலும் அவர், ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

முன்னதாக பள்ளியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டேவிட் செயிண்ட் ஆண்டனி வரவேற்றார். முடிவில் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News