புதுச்சேரி

புதுச்சேரி மின்துறை முன்பு போராட்டம் நடத்த 6 மாதம் தடை- ஜூலை 18-ந் தேதி வரை அமல்

Published On 2023-02-15 18:16 IST   |   Update On 2023-02-15 18:16:00 IST
  • புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது.

புதுச்சேரி:

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

மின்துறை முன்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் மின்துறை பொது சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மின்துறை முன்பு போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவு மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது. இந்த அறிவிப்பு 19.1.23 முதல் 18.7.2023 வரை அமலில் இருக்கும் என மின்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதனால் புதுவை மின்துறை முன்பு போராட்டம் நடத்த 6 மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News