புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் பெண்களுக்கு சேலை வழங்கிய காட்சி.

500 பெண்களுக்கு சேலை-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

Published On 2022-11-07 10:47 IST   |   Update On 2022-11-07 10:47:00 IST
  • ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரி:

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, கோவிலில் நடந்த கோ பூஜை, 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பக்தர்களுக்கு அன்னதானமும், 500. பெண்களுக்கு சேலையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி திருவரசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஏகாம்பரம், தேவராசு, ஜெயமூர்த்தி, ராமதாஸ், ரமேஷ், பழனி, கதிரவன் காட்டேரிக்குப்பம் அன்பரசன், வைஷ்ணவி தேவி, ஐடியல் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News